Skip to main content

பிறழ்வு - கதை 1

மென்மையான குரலில் "நீங்கள் ஏன் இறந்து போய்விட கூடாது" என்று கேட்டேன். அதன் அர்த்தம் அவருக்கு உடனே புரிந்தாலும் சற்று தாமதமாக பதில் சொன்னார்.

"என்ன பிரச்சனை வந்தாலும் ஒருவன் இறந்துவிட வேண்டியதில்லை என்பதுதானே நீ எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் செய்தி. ஏன் என்னிடம் மட்டும் இப்படி கேட்கிறாய்" என்றார்.

"பிறர் வேறு. அவர்களை நான் நல்வழிப்படுத்த வேண்டியுள்ளது. அவர்கள் கொஞ்சம் பிரயோசனமான வாழ்கையை வாழ்கிறார்கள். உங்களைப் போல அல்ல. நீங்கள் மிகவும் பழைய மனிதர். நீங்கள் செய்வது எதுவும் சரியாக செல்லவில்லை. இத்தனை தோல்வியுடன் நீங்கள் வாழ்வது சரியல்ல."

கண்ணாடியில் பிரதிபலித்த கண்களின் ஈரம் கண்ணீராகவும் இருக்கலாம். நான் சொல்ல வேண்டியதின் மிக முக்கியமான செய்தியை சொன்னேன்.

"மேலும், உங்களை சகித்துக் கொள்வது எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது. உங்களால் நான் அடையும் மன உளைச்சல் மிக அதிகம். உங்கள் மூலம் நரகம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அறைக்கு வந்து சேருகிறது."

அவரிடம் நான் சில சிறு விஷகுப்பிகள், வசீகரமான கண்ணாடியில் பிரதிபலிப்பு உள்ள திரவமுடையவை, அந்த அறையில் இருப்பதை சொன்னேன். பிறகு அவர் இறப்பது எனக்கு மகிழ்ச்சி தரப் போவது இல்லை என்று சொன்னேன். நான் விடுதலையை கோரி்தான் அவருக்கு இந்த சந்தர்பத்தை ஏற்படுத்தியதை மன்னிப்பு கேட்கும் விதத்தில் விளக்கினேன். அவருக்கு அனைத்தும் புரிந்தது. அமைதியாக என் படுக்கைக்கு திரும்பினேன். அவர் என்ன செய்கிறார் என்பதை மறந்து நான் தூங்கினேன்.

அந்த அறையில் பிணம் நாறுவதை உணர்ந்து என் அண்டை வீட்டுக்கார்கள் எவரேனும் தகவல் சொல்லி என்னை வந்து சுத்தம் செய்துவிட்டு போகலாம். கடைசியாக ஒரு முறை அவர்களுக்கு அந்த துன்பத்தை தருவதை கடவுள் மன்னிக்கட்டும். இறக்கப் போவது அவரோ நானோ, ஆனால் பிறகு நாங்கள் இருவரும் இந்த பூமியில் இருக்கமாட்டோம்

Comments

Popular posts from this blog

பிறழ்வு - கதை 3

கட்டிடம் நான்காவது மாடியாக வளர்ந்து கொண்டிருந்தது. எலும்புக் கூடு நிற்பதைப் போல மொத்தமாக சிமென்ட் தூண்களும் தளங்களும் மட்டும் முடிந்திருந்தன. அடிப்படை கட்டுமான வேலைகளை முடித்துவிட்டுதான் சுவர் கட்டத்தொடங்குவது என்பது முடிவு. செங்கற்கள் கிடைப்பதும் சிரமமாக இருந்தது. மொத்தப் பணத்தையும் கட்டிவிட்டு காத்திருந்த காலங்கள் உண்டு. அந்தளவு இல்லாவிட்டலும், அடுத்த மாதங்களில் இன்னும் விலையும் தட்டுப்பாடும் குறையலாம் என்பதால் இன்னும் சுவர்வேலைகளை தொடங்கவில்லை தண்ணீர்விட்டுத் தேக்கியிருந்த தளத்தில் நிற்பது நன்றாக இருந்தது. அந்தி சூரியன் நகரின் பின்புலத்தில் தன் வர்ணஜாலங்களை தொடங்கியிருந்தான். மனப்பாடமாக இருந்த ஆதித்யஹிருதய பாடல்களை, ஒன்றிரண்டுதான் தெரியும். சொல்லத் தொடங்கினேன். எதிரிகளை சமாளிக்க இந்த ஸ்லோகங்கள் உதவும் என்று மோகன் கேட்டுக் கொண்டே இருப்பான். கட்டிட பொருட்கள் வாங்க சீனா போயிருக்கிறான். எனக்கு எதிரிகள் யாரும் இல்லை, ஆனாலும் ஸ்லோகத்தில் இருந்த வசீகரத்திற்காக சொல்வேன். வேலையாட்கள் தரைதளத்தில் மோட்டாரை இயக்கிவிட்டு உடல் கழுவிக் கொண்டிருந்தார்கள். சூர்யதாசுக்கு நாளைய வேலைகளை ஒப்படைக...

மூன்று வடையும் ஒரு சமாதானமும்

அவருக்கு டீக்கடை மசால்வடை என்றால் இஷ்டம். டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொல்லியும் அவ்வப்போது ஒன்றிரண்டு வடைகளை தெரிந்தவர்களுக்குத் தெரியாமல் சாப்பிட்டுவிடுவார். அன்றும் ஒரு கையில் வடையும், மறுகையில் டீயும் வைத்து, மாற்றி மாற்றி சுவைத்துக் கொண்டிருந்தார். வடை தீர்ந்தது. இன்னொன்று சாப்பிடலாமா என்று ஆசை. ஆனால், டாக்டர் சொன்னது யோசனைக்கு வந்தது.  அப்போது இவரைவிட பெரிய உடம்புடன் ஒருத்த ர் கண்ணாடிக் கூண்டிலிருந்து வடை எடுப்பதைப் பார்த்தார்.  தன்னைவிட கொழுத்த ஒருவர் கொழுப்பைப்பற்றிக் கவலைபடாதபோது தனக்கு என்னக் கேடு என்று சமாதானம் சொன்னபடி இன்னொன்றும் எடுத்துக் கொண்டார். அதுவும் தீரும் சமயத்தில் அந்த 'இவரைவிட' குண்டான நபர், இன்னொரு வடை எடுப்பதைக் கண்டார். அதனால் உந்தப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாவது வடையையும் காலி செய்தார். வயிறு நிரம்பிவிட்டது. அப்போது போட்டிக் குண்டர் அடுத்த வடையும் எடுக்கையில் நம்ம ஆள் கடுப்பாகிவிட்டார். என்னதான் ருசிக்கு அடிமை என்றாலும், இப்படியா தின்பது என்று இவருக்கே கோபம். அந்த ஆளை சரியாக பார்க்கும் ஆசையில் கடை உள்ளே நுழைந்தார்.  இவரை...

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்