Skip to main content

சீட்லெஸ்

வருடம் 2114.  ஜெஸிராவுக்கு வேலையும் தனிமையும் அலுப்பாக இருக்கிறது என்று கொஞ்ச நாள் முன்னாடித் திருமணம் செய்திருந்தாள். எல்லோரும் போல நிம்மதியாக, தத்ரூபன் 18+ சர்டிஃபைடு ரோபோ வாங்கியிருக்கலாம்.  உறவில் மென்மையாக கையாளும் லவ் மோட், நீண்ட நேரம் தாக்குபிடிக்கும் பேட்டரி, இடையில் ஹேங் ஆவதில்லை என்றெல்லாம் கேள்விபட்டிருக்கிறாள்.



ஆனால், இவள் சக குழுத்தலைவி மும்தா ரோபோவை வேண்டாம் என்றாள்.   மணவாழ்வில் ரோபோத்தனம் அலுத்துவிடும் என்று க்ளோனிங் மனிதன் ராபர்ட்-டை கடும் சிபாரிசு செய்திருந்ததாள்.  அவளிடமும் ராபர்ட் இருப்பதாக தெரிவித்தாள்.

அதனால், அதிகத் திருமணக் கட்டணத்தையும் பொருட்படுத்தாமல் பத்துவருட ஒப்பந்தத்தில் மணம் செய்து அழைத்து வந்திருந்தாள்.  ராபர்ட் பத்து வருடங்களுக்குக் குறைந்து ஒப்புக்கொள்ளவில்லை.  ஜெஸிராவின் ராபர்டை விட இவன் இரண்டு வயது இளையவன்.  இளமையாய் இருந்தான்.  இவளை வலிக்காமல் தூக்கினான்.  நல்ல தேர்வுதான் என்று ஜெஸிராவுக்கு தோன்றியது.

திருமணத்தின் போது அவனும் வசிக்கும்படி 8 x 8 ரூம் மாறிக் கொண்டாள்.   வாடகை அதிகம்தான்.  பரவாயில்லை.   அவனுக்கு படுக்கைக்கு கீழே இணைக்கப்பட்ட டாய்லெட்டை பயன்படுத்த தெரியவில்லை.  நகரத்துக்கு புதியவன்.  ஆனாலும் சந்தோஷமாக இருந்தான்.

வந்த புதிதில் இவளுக்கு சீட்லெஸ் பழங்களை அக்கறையாக ஊட்டிவிடும்போது கிறக்கமாக உணர்ந்தாள்.  உணவுகளை சூடாக்கி கொடுத்தான்.  அசாத்திய திறமைகளை காட்டி அவளை சந்தோஷபடுத்தினான்.   இந்த விஷயத்தில் நிச்சயம் ரோபோ ஈடாகாது.  அவற்றுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லவேண்டும், அவற்றை இயக்க வேண்டும்.

இவ்வளவு இருந்தும் ஒரே வருடத்தில் ராபர்ட் அலுக்க ஆரம்பித்தான்.  அவன் பராமரிப்பு செலவு எக்கச்சக்கமாக ஆகிறது.  ஏற்கனவே திருமணத்துக்காக ஒரு வருட சேமிப்பை இழந்திருந்தாள்.  இந்த பிரச்சனையில் ரோபோ என்றால் சுவிட்ச் ஆப் செய்து ஓரமாக வைத்துவிடலாம். அல்லது வாடகைக்குக் கொடுக்கலாம். இவனை அப்படிச் செய்ய அரசாங்க அனுமதி இல்லை. மேலும், பெண்ணாதிக்கம் என்று என்னன்னெவோ சொல்லி போராடுவான்கள். நிம்மதி கெட்டுவிடும்.  

இன்னும் ஒன்பது வருடங்கள் பாக்கி என்று நினைத்தால், ஜெஸிராவுக்கு கர்ப்பம் ஆனது போல வாந்தி-மயக்கம் வந்தது.  வேறு வழியில்லாமல் மும்தா-விடம் புலம்பிக்கொண்டிருந்த போது "அலட்டிக்காதே, அவன் மூலமா குழந்தைப் பெத்துக்கோ. அதான், எல்லா அனுமதியும் இருக்கே. இந்த அனுகூலத்துக்காகதான் ராபர்ட்டை உனக்குச் சிபாரிசு செய்தேன்.  மேலும்  குழந்தை பிறந்தால், உன் செலவுகள் அனைத்தும் அரசாங்கமே எடுத்துகொள்ளுமே" என்று விளக்கினாள்.

ஜெஸிரா வருத்தமாக "ஏய் லூசு, மறந்துட்டியா, ஃபர்ஸ்ட்-கிரேட் ஆளுக்கு நான் எப்படி ஆசைபடுவது? எனக்கேது பணம்?  ராபர்ட் சீட்லெஸ்" என்றாள் 

Comments

Popular posts from this blog

காமம்

இறுகத் தாழிடப்பட்ட அறையினுள் விடுதலை செய்கிறோம் நம் மிருகங்களை முகர்ந்து ஊளையிட்டு குதறி புணர்ந்து களைத்து ஓய்ந்த சிறு அவகாசத்தில் அகக் கூண்டில் பூட்டிவிட்டு அறைகதவு திறக்கிறோம் பதுங்கிய மிருங்கங்கள் நமது கண்கள் வழியே நமக்குள் தேடுகின்றன அவற்றின் பிம்பங்களை ஒப்பனை மிகுந்த மனதின் அடியாழ இருளில் அமிழ்த்தி  வைக்கிறோம் அவற்றை பத்திரமான கூண்டுகளுடன்

பேய்கதை - தற்கொலை காட்சிகள்

நள்ளிரவை நெருங்கிகொண்டிருந்த மே மாத இரவு. ஹாஸ்டலில் தம் அடிக்க சிறந்த இடம் என்பதால் மொட்டைமாடி சென்றேன். நிலவின் ஒளிபொழிவு குறைவாக இருந்தது. கைப்பிடி சுவர் மீது அமர்ந்திருந்த இருவர் சட்டென்று வெளியே குதித்து விட்டார்கள். சற்று தொலைவில் அமர்ந்து பேசிகொண்டிருந்ததால் எவரென்று கவனிக்கவில்லை.  மூன்று தளங்கள், படிகளில் தாவி இறங்கி, முதல் தளத்தில் இருக்கும் வார்டன் கதவை  தட்டி தகவல் சொல்லிவிட்டு, கீழே ஓடிவந்தால்... ஒரு பையன் மட்டும் ரத்தம் வெளியேற அசைவற்று கிடந்தான். பிணம்தான். இன்னொரு உடல் அல்லது ஆளைக் காணோம். அந்தரத்தில் நிமிர்ந்து பார்த்தேன் வழியில் எங்கும் தொங்குகிறானா என்று. ம்ஹூம், இல்லை. குழப்பமாக இருந்தது. ரெண்டு பேர் குதித்தார்களே! சொன்னால் யாரும் நம்பவில்லை. பிறகு மொட்டைமாடிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். ஐந்து மாதம் கழிந்திருக்கும், பக்கத்து ரூம் தினேஷ் நள்ளிரவில் எழுப்பினான். "டேய் குதிச்சிட்டானுங்க" அடுத்த தற்கொலை. இந்த முறை இரண்டு பிணங்கள் கிடந்தன. ஆனால், தினேஷ் என்னை தனியாக அழைத்து, மொத்தம் மூணுபேர் குதிச்சாங்கடா.... இப்போ ரெண்டு பேர்தான் கிடக்காங்க என்றான். எனக்கும்,

பிறழ்வு - கதை 2

ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம், நானும் அவனும், அவன் என் சித்தப்பா, வைப்பூர் ரயில் கிராசிங் தாண்டும் போது எங்கள் பாதையில் ஒரு பிண ஊர்வலம் சென்று கொண்டிருப்பதை பார்த்தோம். பிண ஊர்வலத்தை தாண்டி எப்போது பள்ளிக்கூடம் செல்வது என்று கேட்டான். நான் என்ன செய்வது என்று கேட்டேன். வா இந்த ரயில் தண்டவாளம் ஒட்டியபடி நடந்து போகலாம் என்றான். எங்கள் சைக்கிளை ஒரு புதர் மறைவில் ஒளித்து வைத்துவிட்டு தண்டவாளம் ஒட்டி நடக்கத் தொடங்கினோம். சித்தப்பா என் வயதுக்கு இணையாக இறங்கிவந்து பேசுவான். அதனால் நேர் பேச்சில் அவர் இவர் பயன்படுத்தினாலும் மானசீகமாக அவன் என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது. ஆனால், சேர்வராயன் ஆறு குறுக்கே இருந்த ரயில்வே பாலம் பயமுறுத்தியது. அது துருபிடித்த இரும்பு பாலம். ஒரு வேளை எந்த திசையில் இருந்தாவது ரயில் வந்தால் பாதையை ஒட்டி அமர்ந்து கொண்டால் போதும் ஆபத்து இல்லை என்றான். கம்பிகளின் உடே இருந்த இடைவெளியில், மிக கீழே, ஆறு சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் பாலத்தை கடந்து செல்கையில் ரயில்வே கேட் மூடப்படுவதை பார்த்தோம். அவன் என்னிடம் "இரு இப்படி ஓரமா நின்னு ரயில் இந்த ப