Skip to main content

வாசிப்பனுபவம் - களவு காமம் காதல்

களவு காமம் காதல் - வாசிப்பனுபவம்



கதை நேரடியானது. எந்த குழப்பமும் இல்லாமல் முக்கியமாக நான் பயப்படும் குறியீடுகள் இல்லாமல் செல்கிறது.  இதன் முதல் அத்தியாயத்தை ஏற்கனவே சாரு வாசகர் வட்டத்தில் படித்த ஞாபகம்.

நாவலை எடுத்ததும் அதுகுறித்து நான் ஏற்கனவே படித்தது, பேசியது, கேட்டது என்று அனைத்தையும் ஒதுக்கிவிட்டு படிக்கத் தொடங்கினேன். குறிப்பாக, புத்தக வெளியீடு அன்று திரு.கரன் கார்கி மற்றும் திரு.(?) அராத்து இருவரும் பேசியது மனதில் சுற்றிகொண்டே இருந்தது. அவற்றை ஏற்று கொண்டுவிட்டால் படிப்பதில் அர்த்தம் இல்லை என்று அவர்கள் சொன்ன கருத்துகளை மறுதலித்துகொண்டே படித்தேன்.

மற்றொன்று, சாம் நாதனின் பேஸ்புக் நிலைதகவல்கள் பாணியில் எழுதப்பட்ட, மனதின் இடையறாத எண்ணங்கள். கதைக்கு தேவையோ இல்லையோ, வாழ்வில் மனம் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் இல்லையா, அதுவும் அதிகம் பேசாதவர்கள் மனம் இடும் கூக்குரல்கள் அப்படியே கதைக்கு பொருந்தும் எண்ணங்களை பதிவு செய்திருக்கிறார். எந்த மூத்த எழுத்தாளரின் பாணி, அல்லது அவர் போல எழுதியிருக்கிறார் என்று சொல்ல முடியாது.

ரகுவர்த்தன் எழுதிய Quotes மொத்தமும் பொருந்தாமலேயே இருக்கிறது. மேலும் விவரணைகள் இல்லை. அதற்கு பதில் மனதின் எண்ணங்கள்.... எண்ணங்கள்.... எண்ணங்கள்....

நாவலின் க்ளைமேக்ஸில் மொத்த நாவலும் இருக்கிறது. நாவலின் செய்தியும், நாவலின் உயிரும் அதுவே. நாவல் என்னை ஏமாற்றவில்லை. பிடித்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

பேய்கதை - தற்கொலை காட்சிகள்

நள்ளிரவை நெருங்கிகொண்டிருந்த மே மாத இரவு. ஹாஸ்டலில் தம் அடிக்க சிறந்த இடம் என்பதால் மொட்டைமாடி சென்றேன். நிலவின் ஒளிபொழிவு குறைவாக இருந்தது. கைப்பிடி சுவர் மீது அமர்ந்திருந்த இருவர் சட்டென்று வெளியே குதித்து விட்டார்கள். சற்று தொலைவில் அமர்ந்து பேசிகொண்டிருந்ததால் எவரென்று கவனிக்கவில்லை.  மூன்று தளங்கள், படிகளில் தாவி இறங்கி, முதல் தளத்தில் இருக்கும் வார்டன் கதவை  தட்டி தகவல் சொல்லிவிட்டு, கீழே ஓடிவந்தால்... ஒரு பையன் மட்டும் ரத்தம் வெளியேற அசைவற்று கிடந்தான். பிணம்தான். இன்னொரு உடல் அல்லது ஆளைக் காணோம். அந்தரத்தில் நிமிர்ந்து பார்த்தேன் வழியில் எங்கும் தொங்குகிறானா என்று. ம்ஹூம், இல்லை. குழப்பமாக இருந்தது. ரெண்டு பேர் குதித்தார்களே! சொன்னால் யாரும் நம்பவில்லை. பிறகு மொட்டைமாடிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். ஐந்து மாதம் கழிந்திருக்கும், பக்கத்து ரூம் தினேஷ் நள்ளிரவில் எழுப்பினான். "டேய் குதிச்சிட்டானுங்க" அடுத்த தற்கொலை. இந்த முறை இரண்டு பிணங்கள் கிடந்தன. ஆனால், தினேஷ் என்னை தனியாக அழைத்து, மொத்தம் மூணுபேர் குதிச்சாங்கடா.... இப்போ ரெண்டு பேர்தான் கிடக்காங்க என்றான். எனக்கும்,

நினைவுப்பாதை, நகுலன்

நாம் முக்கியம் என்று நினைப்பதெல்லாம் அப்படி முக்கியமில்லை என்று நினைக்கக் கற்றுக் கொள்கிறோமோ அன்று நமது பிரச்சனைகளெல்லாம் பைசலாகிவிடும். ஆனால் இப்படியெல்லாம் சொல்வதெளிது. செய்வதரிது. அவர் அடிக்கடி ஒரு உதாரணம் சொல்வார். உனக்கு வேண்டிய ஆனால் அவசியமில்லாத ஒன்று கைமறதியாக வைத்துவிட்டதால் கிடைக்கவில்லை. அது அப்படியே தொலைந்துப் போனாலும் பெரிய நஷ்டமுமில்லை. விவேகப் பூர்வமாக இனிமேல் சற்று ஒழுங்காக இருக்க வேண்டுமென்பதும், இந்த விஷயத்தை மறந்துவிடவேண்டும் என்பதும்தான் ஞானம். ஆனால் முக்கால்வாசிப் பேர்களும் இப்படியெல்லாம் மனம் உழல்வதால் தாங்களும் உழல்வார்கள். மனோதத்துவம் படித்துபடித்து நமக்குப் பிரச்சனைகள்தான் பிரச்சனைகளின் பரிகாரத்தைவிட முக்கியமாகப்படுகிறது என்பார். ~ நினைவுப்பாதை, நகுலன்

காமம்

இறுகத் தாழிடப்பட்ட அறையினுள் விடுதலை செய்கிறோம் நம் மிருகங்களை முகர்ந்து ஊளையிட்டு குதறி புணர்ந்து களைத்து ஓய்ந்த சிறு அவகாசத்தில் அகக் கூண்டில் பூட்டிவிட்டு அறைகதவு திறக்கிறோம் பதுங்கிய மிருங்கங்கள் நமது கண்கள் வழியே நமக்குள் தேடுகின்றன அவற்றின் பிம்பங்களை ஒப்பனை மிகுந்த மனதின் அடியாழ இருளில் அமிழ்த்தி  வைக்கிறோம் அவற்றை பத்திரமான கூண்டுகளுடன்