Skip to main content

வாசிப்பனுபவம் - களவு காமம் காதல்

களவு காமம் காதல் - வாசிப்பனுபவம்



கதை நேரடியானது. எந்த குழப்பமும் இல்லாமல் முக்கியமாக நான் பயப்படும் குறியீடுகள் இல்லாமல் செல்கிறது.  இதன் முதல் அத்தியாயத்தை ஏற்கனவே சாரு வாசகர் வட்டத்தில் படித்த ஞாபகம்.

நாவலை எடுத்ததும் அதுகுறித்து நான் ஏற்கனவே படித்தது, பேசியது, கேட்டது என்று அனைத்தையும் ஒதுக்கிவிட்டு படிக்கத் தொடங்கினேன். குறிப்பாக, புத்தக வெளியீடு அன்று திரு.கரன் கார்கி மற்றும் திரு.(?) அராத்து இருவரும் பேசியது மனதில் சுற்றிகொண்டே இருந்தது. அவற்றை ஏற்று கொண்டுவிட்டால் படிப்பதில் அர்த்தம் இல்லை என்று அவர்கள் சொன்ன கருத்துகளை மறுதலித்துகொண்டே படித்தேன்.

மற்றொன்று, சாம் நாதனின் பேஸ்புக் நிலைதகவல்கள் பாணியில் எழுதப்பட்ட, மனதின் இடையறாத எண்ணங்கள். கதைக்கு தேவையோ இல்லையோ, வாழ்வில் மனம் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் இல்லையா, அதுவும் அதிகம் பேசாதவர்கள் மனம் இடும் கூக்குரல்கள் அப்படியே கதைக்கு பொருந்தும் எண்ணங்களை பதிவு செய்திருக்கிறார். எந்த மூத்த எழுத்தாளரின் பாணி, அல்லது அவர் போல எழுதியிருக்கிறார் என்று சொல்ல முடியாது.

ரகுவர்த்தன் எழுதிய Quotes மொத்தமும் பொருந்தாமலேயே இருக்கிறது. மேலும் விவரணைகள் இல்லை. அதற்கு பதில் மனதின் எண்ணங்கள்.... எண்ணங்கள்.... எண்ணங்கள்....

நாவலின் க்ளைமேக்ஸில் மொத்த நாவலும் இருக்கிறது. நாவலின் செய்தியும், நாவலின் உயிரும் அதுவே. நாவல் என்னை ஏமாற்றவில்லை. பிடித்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

மூன்று வடையும் ஒரு சமாதானமும்

அவருக்கு டீக்கடை மசால்வடை என்றால் இஷ்டம். டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொல்லியும் அவ்வப்போது ஒன்றிரண்டு வடைகளை தெரிந்தவர்களுக்குத் தெரியாமல் சாப்பிட்டுவிடுவார். அன்றும் ஒரு கையில் வடையும், மறுகையில் டீயும் வைத்து, மாற்றி மாற்றி சுவைத்துக் கொண்டிருந்தார். வடை தீர்ந்தது. இன்னொன்று சாப்பிடலாமா என்று ஆசை. ஆனால், டாக்டர் சொன்னது யோசனைக்கு வந்தது.  அப்போது இவரைவிட பெரிய உடம்புடன் ஒருத்த ர் கண்ணாடிக் கூண்டிலிருந்து வடை எடுப்பதைப் பார்த்தார்.  தன்னைவிட கொழுத்த ஒருவர் கொழுப்பைப்பற்றிக் கவலைபடாதபோது தனக்கு என்னக் கேடு என்று சமாதானம் சொன்னபடி இன்னொன்றும் எடுத்துக் கொண்டார். அதுவும் தீரும் சமயத்தில் அந்த 'இவரைவிட' குண்டான நபர், இன்னொரு வடை எடுப்பதைக் கண்டார். அதனால் உந்தப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாவது வடையையும் காலி செய்தார். வயிறு நிரம்பிவிட்டது. அப்போது போட்டிக் குண்டர் அடுத்த வடையும் எடுக்கையில் நம்ம ஆள் கடுப்பாகிவிட்டார். என்னதான் ருசிக்கு அடிமை என்றாலும், இப்படியா தின்பது என்று இவருக்கே கோபம். அந்த ஆளை சரியாக பார்க்கும் ஆசையில் கடை உள்ளே நுழைந்தார்.  இவரை...

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்

தீண்டல்

மதுப்பற்றி நன்கு தெரியும் அருகிலிருக்கும் ஆபத்து மதிமயக்கும் மாயா பணம் உறிஞ்சும் அட்டை  குணம் மாற்றும் நெருப்பு குடிதாக்கும் இடி தீண்டல் அழிந்த அறிந்த மனிதர்கள் அநேகம் அவள் அரவணைப்பில் மீளாச் சிலரும் என் சிநேகம் பேய்வீட்டில் வாழநேர்ந்த மருமகள்போல தமிழ்த்திருநாட்டில் குடிக்காதவர்கள் ஒவ்வொருநாளும் அவளைக் கண்டும் காணாத ரிஷிபோலக் கடக்கையில் தெய்வப் பிரசாதம் என தருகிறார்கள் ஒருமடக்குச் சாராயம் வா விஸ்வாமித்ரா என உள்ளும் புறமும் கிளர்ந்து எழுகிறாள் மேனகை எனக்குள்.