Skip to main content

திகம்பரன் என்ற கட்டுரையில், சாரு நிவேதிதா

பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே சுருக்கி விட்டது இந்தச் சூழலின் அவலங்களில் ஒன்று. அவர் முன்வைத்த ஆயிரத்தோரு விஷயங்களில் ஆயிரம் விஷயங்களை விட்டுவிட்டு , கடவுள் மறுப்பு என்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவரை விமர்சிப்பதோ கொண்டாடுவதோ வெறும் மதியீனமேயாகும். பெரியாரின் கடவுள் மறுப்புக் கட்டுரைகளையும் , பேச்சுக்களையும் வாசித்துப் பார்க்கும் போது அவர் கடவுளை எதிர்த்ததன் காரணம் , கடவுள் கோட்பாட்டின் காரணமாக ஏற்பட்ட ஜாதீய வேறுபாடுகள்தான். அரசனுக்கு ஆலோசனை வழங்க ஒரு ஜாதியும் , மனித மலத்தைச் சுமப்பதற்கு மற்றொரு ஜாதியும் என்ற அவலம் கடவுள் என்ற கோட்பாட்டை முன்வைத்து நடந்ததாலேயே அவர் கடவுளை எதிர்த்தார்.

மற்றபடி பெரியார் சாதி, இனம், மொழி, தேசம், கலாச்சாரம் போன்ற எல்லா அடையாளங்களையும் தாண்டியவர். அதனால்தான் அவர் முப்பதுகளில் ஐரோப்பா சென்ற போது பெர்லினுக்குப் பக்கத்திலுள்ள ஒரு ஊரில் இருந்த நிர்வாண சங்கத்தில் உறுப்பினராகி அவர்களோடு நிர்வாணமாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படத்தை அவரது ஐரோப்பியப் பயணம் பற்றிய நூலில் நான் பார்த்திருக்கிறேன். இந்தியாவில் துறவிகளைத் தவிர வேறு எந்த அரசியல்வாதிக்கோ , சிந்தனையாளருக்கோ இந்தத் துணிச்சல் வருமா? இதை அவர் ஒரு கலகமாகச் செய்யவில்லை. மாற்றுக் கலாச்சாரத்தையும் ( Alternate culture), மாற்று வாழ்க்கை முறையையும் அவர் இவ்வாறே ஆதரித்தார்.

இதைத்தான் நான் பெரியாரிடமிருந்து ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் , பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் பாரதியைக் கொண்டாடுவதும் , பெரியாரை முட்டாள் என்று வசை பாடுவதும் இதனால்தான். ஏனென்றால் அவர்களால் தத்தம் குடும்பம் , மொழி , கலாச்சாரம் போன்ற எந்த எல்லைகளையும் தாண்ட முடியவில்லை என்பதே இதற்குக் காரணம்.

 - திகம்பரன் என்ற கட்டுரையில், சாரு நிவேதிதா

Comments

Popular posts from this blog

பிறழ்வு - கதை 3

கட்டிடம் நான்காவது மாடியாக வளர்ந்து கொண்டிருந்தது. எலும்புக் கூடு நிற்பதைப் போல மொத்தமாக சிமென்ட் தூண்களும் தளங்களும் மட்டும் முடிந்திருந்தன. அடிப்படை கட்டுமான வேலைகளை முடித்துவிட்டுதான் சுவர் கட்டத்தொடங்குவது என்பது முடிவு. செங்கற்கள் கிடைப்பதும் சிரமமாக இருந்தது. மொத்தப் பணத்தையும் கட்டிவிட்டு காத்திருந்த காலங்கள் உண்டு. அந்தளவு இல்லாவிட்டலும், அடுத்த மாதங்களில் இன்னும் விலையும் தட்டுப்பாடும் குறையலாம் என்பதால் இன்னும் சுவர்வேலைகளை தொடங்கவில்லை தண்ணீர்விட்டுத் தேக்கியிருந்த தளத்தில் நிற்பது நன்றாக இருந்தது. அந்தி சூரியன் நகரின் பின்புலத்தில் தன் வர்ணஜாலங்களை தொடங்கியிருந்தான். மனப்பாடமாக இருந்த ஆதித்யஹிருதய பாடல்களை, ஒன்றிரண்டுதான் தெரியும். சொல்லத் தொடங்கினேன். எதிரிகளை சமாளிக்க இந்த ஸ்லோகங்கள் உதவும் என்று மோகன் கேட்டுக் கொண்டே இருப்பான். கட்டிட பொருட்கள் வாங்க சீனா போயிருக்கிறான். எனக்கு எதிரிகள் யாரும் இல்லை, ஆனாலும் ஸ்லோகத்தில் இருந்த வசீகரத்திற்காக சொல்வேன். வேலையாட்கள் தரைதளத்தில் மோட்டாரை இயக்கிவிட்டு உடல் கழுவிக் கொண்டிருந்தார்கள். சூர்யதாசுக்கு நாளைய வேலைகளை ஒப்படைக...

மூன்று வடையும் ஒரு சமாதானமும்

அவருக்கு டீக்கடை மசால்வடை என்றால் இஷ்டம். டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொல்லியும் அவ்வப்போது ஒன்றிரண்டு வடைகளை தெரிந்தவர்களுக்குத் தெரியாமல் சாப்பிட்டுவிடுவார். அன்றும் ஒரு கையில் வடையும், மறுகையில் டீயும் வைத்து, மாற்றி மாற்றி சுவைத்துக் கொண்டிருந்தார். வடை தீர்ந்தது. இன்னொன்று சாப்பிடலாமா என்று ஆசை. ஆனால், டாக்டர் சொன்னது யோசனைக்கு வந்தது.  அப்போது இவரைவிட பெரிய உடம்புடன் ஒருத்த ர் கண்ணாடிக் கூண்டிலிருந்து வடை எடுப்பதைப் பார்த்தார்.  தன்னைவிட கொழுத்த ஒருவர் கொழுப்பைப்பற்றிக் கவலைபடாதபோது தனக்கு என்னக் கேடு என்று சமாதானம் சொன்னபடி இன்னொன்றும் எடுத்துக் கொண்டார். அதுவும் தீரும் சமயத்தில் அந்த 'இவரைவிட' குண்டான நபர், இன்னொரு வடை எடுப்பதைக் கண்டார். அதனால் உந்தப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாவது வடையையும் காலி செய்தார். வயிறு நிரம்பிவிட்டது. அப்போது போட்டிக் குண்டர் அடுத்த வடையும் எடுக்கையில் நம்ம ஆள் கடுப்பாகிவிட்டார். என்னதான் ருசிக்கு அடிமை என்றாலும், இப்படியா தின்பது என்று இவருக்கே கோபம். அந்த ஆளை சரியாக பார்க்கும் ஆசையில் கடை உள்ளே நுழைந்தார்.  இவரை...

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்