Skip to main content

பேய்க் கதை - நண்பன்

ஒருத்திக்குத் தன்னுடைய கணவன் மீது மிகுந்த காதல் என்றாலும், அவனுடைய நண்பன் ஒருவன் மீது எரிச்சல். எதை பேசினாலும் உங்கள் நண்பரிடம் இதையெல்லாம் சொல்லாதீர்கள் என்பாள். இவனும் தலையாட்டிவிட்டு ஆனால் தன் நண்பனிடம் சொல்லிவிடுவான். தான் சொல்லியும் கணவன் நண்பனுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறானே என்று கோபம் அவளுக்கு. 

அன்று கணவனுக்கு தோசை வார்த்துப் போட்டுக்கொண்டே அவளின் தம்பியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். பின்னர் வழக்கம் போல, "இதையாவது உங்கள் நண்பரிடம் போய் சொல்லாதீர்கள்" என்று சொன்னாள்.

அந்த நேரம் சரியாக நண்பன் போனில் அழைத்தான். இவனும் பேச்சு வாக்கில் தன் மச்சினன் விஷயத்தை சொல்லிவிட்டான். மனைவி வெறியாகி, தோசைக்கரண்டியுடன் கணவன் மீது பாய, கணவன் நகர்ந்து தப்பித்துக் கொண்டான். அப்போது அவன் பேசிகொண்டிருந்த போன் கீழே விழுந்துவிட்டது. மனைவி கடுப்பில் போனை தோசைக்கரண்டியால் நாலு சாத்து சாத்தி உடைத்துவிட்டாள்.

மறுநாள் அவளுடைய கணவன் தன் நண்பனை சந்திக்கப் போனான். அவன் முகத்தில் பலத்த அடிபட்டு, கட்டும் போட்டிருந்தான். என்னடா ஆச்சு என்று விசாரித்தால், "என் வீட்டில் தோசைக்கரண்டி கீழே கிடந்திருக்கிறது. நேற்று உன்னிடம் போனில் பேசிக்கொண்டே கவனிக்காமல் அதில் காலை வைத்தேனா, வழுக்கிவிழுந்து அடிபட்டுக் கொண்டேன்" என்றான்.

அன்றிலிருந்து கணவன் பேய்களை நம்பத் தொடங்கிவிட்டான்.

Comments

Popular posts from this blog

காமம்

இறுகத் தாழிடப்பட்ட அறையினுள் விடுதலை செய்கிறோம் நம் மிருகங்களை முகர்ந்து ஊளையிட்டு குதறி புணர்ந்து களைத்து ஓய்ந்த சிறு அவகாசத்தில் அகக் கூண்டில் பூட்டிவிட்டு அறைகதவு திறக்கிறோம் பதுங்கிய மிருங்கங்கள் நமது கண்கள் வழியே நமக்குள் தேடுகின்றன அவற்றின் பிம்பங்களை ஒப்பனை மிகுந்த மனதின் அடியாழ இருளில் அமிழ்த்தி  வைக்கிறோம் அவற்றை பத்திரமான கூண்டுகளுடன்

பேய்கதை - தற்கொலை காட்சிகள்

நள்ளிரவை நெருங்கிகொண்டிருந்த மே மாத இரவு. ஹாஸ்டலில் தம் அடிக்க சிறந்த இடம் என்பதால் மொட்டைமாடி சென்றேன். நிலவின் ஒளிபொழிவு குறைவாக இருந்தது. கைப்பிடி சுவர் மீது அமர்ந்திருந்த இருவர் சட்டென்று வெளியே குதித்து விட்டார்கள். சற்று தொலைவில் அமர்ந்து பேசிகொண்டிருந்ததால் எவரென்று கவனிக்கவில்லை.  மூன்று தளங்கள், படிகளில் தாவி இறங்கி, முதல் தளத்தில் இருக்கும் வார்டன் கதவை  தட்டி தகவல் சொல்லிவிட்டு, கீழே ஓடிவந்தால்... ஒரு பையன் மட்டும் ரத்தம் வெளியேற அசைவற்று கிடந்தான். பிணம்தான். இன்னொரு உடல் அல்லது ஆளைக் காணோம். அந்தரத்தில் நிமிர்ந்து பார்த்தேன் வழியில் எங்கும் தொங்குகிறானா என்று. ம்ஹூம், இல்லை. குழப்பமாக இருந்தது. ரெண்டு பேர் குதித்தார்களே! சொன்னால் யாரும் நம்பவில்லை. பிறகு மொட்டைமாடிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். ஐந்து மாதம் கழிந்திருக்கும், பக்கத்து ரூம் தினேஷ் நள்ளிரவில் எழுப்பினான். "டேய் குதிச்சிட்டானுங்க" அடுத்த தற்கொலை. இந்த முறை இரண்டு பிணங்கள் கிடந்தன. ஆனால், தினேஷ் என்னை தனியாக அழைத்து, மொத்தம் மூணுபேர் குதிச்சாங்கடா.... இப்போ ரெண்டு பேர்தான் கிடக்காங்க என்றான். எனக்கும்,

பேய்கதை

பூமிகா வாசலில் அமர்ந்து மகளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். பௌர்ணமி நிலா குட்டிப் பெண்ணுக்கு ஞாபகப் படுத்தியிருக்க வேண்டும். "அம்மா அம்மா, பேய் கதை ஒண்ணு சொல்லுமா"  உடனே, மரகிளைகள் குரங்குகள் நடப்பதைப் போல சலசலத்தது. அம்மா நிமிர்ந்து பார்த்தாள். கிளைகள் மட்டும் குலுங்கின. யாரும் இல்லை. "இப்போ வேணாண்டி. இரவில் நீ பயந்துக்குவே, சாமி கதை சொல்றேன்" என்றாள் டல்லடித்த பேச்சிலர் இளைஞர்களைப் போல சப்தமின்றி கிளைகள் அமைதியாகிவிட்டன.