Skip to main content

காமமும்... ரயிலும்....

காமமும் ரயிலும்...
இல்லம் நீங்கும்
நீண்ட பயணத்தில்
மோகவிதை வளரும்
காலம் தண்ணீர்
ஏக்கம் உரம்
அவள் நினைவு வரப்புயர
மோகம் உயரும்
பசியல்ல...
பழகிய ருசிகூட
பந்திக்கு அழைக்கிறது.
*
அன்று முதலிரவில்
ஆரம்பத் தயக்கங்களை
பரஸ்பரம் வென்றோம்
திறப்புவிழா
தொடங்கியது
திறக்கவென்றே மூடப்பட்ட
திரைகள் விலக
முதலில் தரிசித்த
கருப்பு முத்துக்கள் இப்போதும்
என் கருவிழியில்
தேங்கிக் கிடக்கின்றன
*
அவள் கருப்பு
நான் கருப்பு
வேறு வேறு
கருப்பு
அவள் கருப்பிலும்
கொங்கைகள் தனிக்கருப்பு
கருப்பின் நூறுவகை
உள்வண்ணங்களை
எண்ணத் தொடங்கினேன்
தடுத்த விரல்களை
முத்தமிட்டு அடக்கினேன்
கண்ணாடித்தொட்டி மீன்கள்
கள்வனிடமிருந்து
வீட்டைக் காக்க முடியுமா?
*
மெத்தென்ற இதம்
இதத்துடன் தொடுதல் மோகம்
நெற்றியும் கண்களும்
காதுகளும்
கன்னக் கதுப்புகளும்
அவள் எனக்கு ஒதுக்கித் தந்த
முத்தப் பிரதேசங்கள்
அவற்றை நான் ஒதுக்கி விடுவேன்
அதரங்கள்தான் எனக்கு ஈர்ப்பு
அவளின் நான்கு அதரங்களும்
சுவைக்கப் பிரியமானவை
குவளை குவளையாய்
அருந்தினேன் அவளை
அவள் குவளையில் அவளை…
*
சிகரங்களில் தேனெடுக்கும்
தேனீ
சுனைகளில் வாய்வைத்து
அருந்தும் மிருகம்
சாரம்மட்டும் உறிஞ்சி
படையலை விட்டுவைக்கும்
தெய்வம்
நான்
*
சிறு பிராயத்திலிருந்து
ஓய்வெடுத்த படுக்கையில்
இப்போது உழைக்கும் இரவுகள்
*
தளர்ந்து
களைத்து
நிறைந்து
எழுந்து நிற்கிறது
வீட்டு நினைவு.
தடதடக்கும் ரயிலில்
கசங்கிய தினசரியால்
மூட முயல்கிறேன்
சூழலை மீறிப்
புடைப்பது அனைத்தையும்.

Comments

Popular posts from this blog

மூன்று வடையும் ஒரு சமாதானமும்

அவருக்கு டீக்கடை மசால்வடை என்றால் இஷ்டம். டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொல்லியும் அவ்வப்போது ஒன்றிரண்டு வடைகளை தெரிந்தவர்களுக்குத் தெரியாமல் சாப்பிட்டுவிடுவார். அன்றும் ஒரு கையில் வடையும், மறுகையில் டீயும் வைத்து, மாற்றி மாற்றி சுவைத்துக் கொண்டிருந்தார். வடை தீர்ந்தது. இன்னொன்று சாப்பிடலாமா என்று ஆசை. ஆனால், டாக்டர் சொன்னது யோசனைக்கு வந்தது.  அப்போது இவரைவிட பெரிய உடம்புடன் ஒருத்த ர் கண்ணாடிக் கூண்டிலிருந்து வடை எடுப்பதைப் பார்த்தார்.  தன்னைவிட கொழுத்த ஒருவர் கொழுப்பைப்பற்றிக் கவலைபடாதபோது தனக்கு என்னக் கேடு என்று சமாதானம் சொன்னபடி இன்னொன்றும் எடுத்துக் கொண்டார். அதுவும் தீரும் சமயத்தில் அந்த 'இவரைவிட' குண்டான நபர், இன்னொரு வடை எடுப்பதைக் கண்டார். அதனால் உந்தப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாவது வடையையும் காலி செய்தார். வயிறு நிரம்பிவிட்டது. அப்போது போட்டிக் குண்டர் அடுத்த வடையும் எடுக்கையில் நம்ம ஆள் கடுப்பாகிவிட்டார். என்னதான் ருசிக்கு அடிமை என்றாலும், இப்படியா தின்பது என்று இவருக்கே கோபம். அந்த ஆளை சரியாக பார்க்கும் ஆசையில் கடை உள்ளே நுழைந்தார்.  இவரை...

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்

தீண்டல்

மதுப்பற்றி நன்கு தெரியும் அருகிலிருக்கும் ஆபத்து மதிமயக்கும் மாயா பணம் உறிஞ்சும் அட்டை  குணம் மாற்றும் நெருப்பு குடிதாக்கும் இடி தீண்டல் அழிந்த அறிந்த மனிதர்கள் அநேகம் அவள் அரவணைப்பில் மீளாச் சிலரும் என் சிநேகம் பேய்வீட்டில் வாழநேர்ந்த மருமகள்போல தமிழ்த்திருநாட்டில் குடிக்காதவர்கள் ஒவ்வொருநாளும் அவளைக் கண்டும் காணாத ரிஷிபோலக் கடக்கையில் தெய்வப் பிரசாதம் என தருகிறார்கள் ஒருமடக்குச் சாராயம் வா விஸ்வாமித்ரா என உள்ளும் புறமும் கிளர்ந்து எழுகிறாள் மேனகை எனக்குள்.