குடிபழக்கம் உள்ளவர்கள் சிலருக்கு குடித்ததும் உளரும் பழக்கமும் இருக்கிறது. குடிக்காதவர்களுக்கு பிரச்சனையில்லை. அவர்கள் எப்போதுமே உளறமுடியும்.
இறுகத் தாழிடப்பட்ட அறையினுள் விடுதலை செய்கிறோம் நம் மிருகங்களை முகர்ந்து ஊளையிட்டு குதறி புணர்ந்து களைத்து ஓய்ந்த சிறு அவகாசத்தில் அகக் கூண்டில் பூட்டிவிட்டு அறைகதவு திறக்கிறோம் பதுங்கிய மிருங்கங்கள் நமது கண்கள் வழியே நமக்குள் தேடுகின்றன அவற்றின் பிம்பங்களை ஒப்பனை மிகுந்த மனதின் அடியாழ இருளில் அமிழ்த்தி வைக்கிறோம் அவற்றை பத்திரமான கூண்டுகளுடன்
Comments
Post a Comment