Skip to main content

கூடடைதல்

கவனித்துக் கொண்டிருக்கும்போதே
நிழல்கள் கரைந்து
இருளோடு கலந்துவிடும்
கந்தாலா மலைகிராமத்தில்
அந்திச் சூரியன் சுறுசுறுப்பானது
விரைந்து மறையக் கூடியது

மலைச்சரிவு வனாந்திரத்தில்
அசட்டையுடன் தனியனாக
உங்கள் நிழலை
தொலைத்தவுடன் நீங்கள்
பயம் கொள்கிறீர்கள்

ஓடை சலசலப்பு
முகத்தில் மோதும் பூச்சிகள்
பறவைகள் எழுப்பும் சப்தங்கள்
காலில் மிதிபடும் வினோத மிருதுத்தன்மை

யாவும் பகலிலும் இருந்தவைதான் என்பதை
ஞாபகபடுத்த எவருமற்ற தனிமையில்
உங்கள் பயங்கள் பெருகுகிறது.

உங்கள் உறங்குமிடம் செல்லும் பாதை
இரட்டிப்பாக நீண்டுவிட்டது

கிறுக்குத்தனமான தைரியம்
கிறுக்குத்தனமான பயம்

உங்களுக்கு உதவி கிடைக்கிறது
பழகியறியாத, நாகரீகமற்ற
எதிர்படும் மலைவாசியை உங்களுக்கு
பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது

உங்கள் இடத்துக்கு
அவன் கைகாட்டும் திசையை
நம்புகிறீர்கள்

இன்னும் சிறிது தூரம்,
கூடடைந்த பிறகு பாதுகாப்பில்
இருளும், உலகமும் உங்களுக்கு
மீண்டும் ரம்யமாகிவிடும்

நீங்கள் மிதித்துகொண்டிருக்கும் மென் புற்கள்
வேதனையுறுகின்றன.  அதில் உறங்கிகொண்டிருந்த
புழு இறந்துவிட்டது

நகர்ந்து கொள்ளுங்கள்

புற்கள் பனிக்காற்றில்
மெல்லத் தலைநிமிரும்
ஆனாலும் அவற்றின் மீது படிந்திருக்கும் சேறு
இறுகத்தொடங்கும்


Comments

Popular posts from this blog

பிறழ்வு - கதை 3

கட்டிடம் நான்காவது மாடியாக வளர்ந்து கொண்டிருந்தது. எலும்புக் கூடு நிற்பதைப் போல மொத்தமாக சிமென்ட் தூண்களும் தளங்களும் மட்டும் முடிந்திருந்தன. அடிப்படை கட்டுமான வேலைகளை முடித்துவிட்டுதான் சுவர் கட்டத்தொடங்குவது என்பது முடிவு. செங்கற்கள் கிடைப்பதும் சிரமமாக இருந்தது. மொத்தப் பணத்தையும் கட்டிவிட்டு காத்திருந்த காலங்கள் உண்டு. அந்தளவு இல்லாவிட்டலும், அடுத்த மாதங்களில் இன்னும் விலையும் தட்டுப்பாடும் குறையலாம் என்பதால் இன்னும் சுவர்வேலைகளை தொடங்கவில்லை தண்ணீர்விட்டுத் தேக்கியிருந்த தளத்தில் நிற்பது நன்றாக இருந்தது. அந்தி சூரியன் நகரின் பின்புலத்தில் தன் வர்ணஜாலங்களை தொடங்கியிருந்தான். மனப்பாடமாக இருந்த ஆதித்யஹிருதய பாடல்களை, ஒன்றிரண்டுதான் தெரியும். சொல்லத் தொடங்கினேன். எதிரிகளை சமாளிக்க இந்த ஸ்லோகங்கள் உதவும் என்று மோகன் கேட்டுக் கொண்டே இருப்பான். கட்டிட பொருட்கள் வாங்க சீனா போயிருக்கிறான். எனக்கு எதிரிகள் யாரும் இல்லை, ஆனாலும் ஸ்லோகத்தில் இருந்த வசீகரத்திற்காக சொல்வேன். வேலையாட்கள் தரைதளத்தில் மோட்டாரை இயக்கிவிட்டு உடல் கழுவிக் கொண்டிருந்தார்கள். சூர்யதாசுக்கு நாளைய வேலைகளை ஒப்படைக...

மூன்று வடையும் ஒரு சமாதானமும்

அவருக்கு டீக்கடை மசால்வடை என்றால் இஷ்டம். டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொல்லியும் அவ்வப்போது ஒன்றிரண்டு வடைகளை தெரிந்தவர்களுக்குத் தெரியாமல் சாப்பிட்டுவிடுவார். அன்றும் ஒரு கையில் வடையும், மறுகையில் டீயும் வைத்து, மாற்றி மாற்றி சுவைத்துக் கொண்டிருந்தார். வடை தீர்ந்தது. இன்னொன்று சாப்பிடலாமா என்று ஆசை. ஆனால், டாக்டர் சொன்னது யோசனைக்கு வந்தது.  அப்போது இவரைவிட பெரிய உடம்புடன் ஒருத்த ர் கண்ணாடிக் கூண்டிலிருந்து வடை எடுப்பதைப் பார்த்தார்.  தன்னைவிட கொழுத்த ஒருவர் கொழுப்பைப்பற்றிக் கவலைபடாதபோது தனக்கு என்னக் கேடு என்று சமாதானம் சொன்னபடி இன்னொன்றும் எடுத்துக் கொண்டார். அதுவும் தீரும் சமயத்தில் அந்த 'இவரைவிட' குண்டான நபர், இன்னொரு வடை எடுப்பதைக் கண்டார். அதனால் உந்தப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாவது வடையையும் காலி செய்தார். வயிறு நிரம்பிவிட்டது. அப்போது போட்டிக் குண்டர் அடுத்த வடையும் எடுக்கையில் நம்ம ஆள் கடுப்பாகிவிட்டார். என்னதான் ருசிக்கு அடிமை என்றாலும், இப்படியா தின்பது என்று இவருக்கே கோபம். அந்த ஆளை சரியாக பார்க்கும் ஆசையில் கடை உள்ளே நுழைந்தார்.  இவரை...

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்