Skip to main content

கூடடைதல்

கவனித்துக் கொண்டிருக்கும்போதே
நிழல்கள் கரைந்து
இருளோடு கலந்துவிடும்
கந்தாலா மலைகிராமத்தில்
அந்திச் சூரியன் சுறுசுறுப்பானது
விரைந்து மறையக் கூடியது

மலைச்சரிவு வனாந்திரத்தில்
அசட்டையுடன் தனியனாக
உங்கள் நிழலை
தொலைத்தவுடன் நீங்கள்
பயம் கொள்கிறீர்கள்

ஓடை சலசலப்பு
முகத்தில் மோதும் பூச்சிகள்
பறவைகள் எழுப்பும் சப்தங்கள்
காலில் மிதிபடும் வினோத மிருதுத்தன்மை

யாவும் பகலிலும் இருந்தவைதான் என்பதை
ஞாபகபடுத்த எவருமற்ற தனிமையில்
உங்கள் பயங்கள் பெருகுகிறது.

உங்கள் உறங்குமிடம் செல்லும் பாதை
இரட்டிப்பாக நீண்டுவிட்டது

கிறுக்குத்தனமான தைரியம்
கிறுக்குத்தனமான பயம்

உங்களுக்கு உதவி கிடைக்கிறது
பழகியறியாத, நாகரீகமற்ற
எதிர்படும் மலைவாசியை உங்களுக்கு
பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது

உங்கள் இடத்துக்கு
அவன் கைகாட்டும் திசையை
நம்புகிறீர்கள்

இன்னும் சிறிது தூரம்,
கூடடைந்த பிறகு பாதுகாப்பில்
இருளும், உலகமும் உங்களுக்கு
மீண்டும் ரம்யமாகிவிடும்

நீங்கள் மிதித்துகொண்டிருக்கும் மென் புற்கள்
வேதனையுறுகின்றன.  அதில் உறங்கிகொண்டிருந்த
புழு இறந்துவிட்டது

நகர்ந்து கொள்ளுங்கள்

புற்கள் பனிக்காற்றில்
மெல்லத் தலைநிமிரும்
ஆனாலும் அவற்றின் மீது படிந்திருக்கும் சேறு
இறுகத்தொடங்கும்


Comments

Popular posts from this blog

காமம்

இறுகத் தாழிடப்பட்ட அறையினுள் விடுதலை செய்கிறோம் நம் மிருகங்களை முகர்ந்து ஊளையிட்டு குதறி புணர்ந்து களைத்து ஓய்ந்த சிறு அவகாசத்தில் அகக் கூண்டில் பூட்டிவிட்டு அறைகதவு திறக்கிறோம் பதுங்கிய மிருங்கங்கள் நமது கண்கள் வழியே நமக்குள் தேடுகின்றன அவற்றின் பிம்பங்களை ஒப்பனை மிகுந்த மனதின் அடியாழ இருளில் அமிழ்த்தி  வைக்கிறோம் அவற்றை பத்திரமான கூண்டுகளுடன்

பேய்கதை - தற்கொலை காட்சிகள்

நள்ளிரவை நெருங்கிகொண்டிருந்த மே மாத இரவு. ஹாஸ்டலில் தம் அடிக்க சிறந்த இடம் என்பதால் மொட்டைமாடி சென்றேன். நிலவின் ஒளிபொழிவு குறைவாக இருந்தது. கைப்பிடி சுவர் மீது அமர்ந்திருந்த இருவர் சட்டென்று வெளியே குதித்து விட்டார்கள். சற்று தொலைவில் அமர்ந்து பேசிகொண்டிருந்ததால் எவரென்று கவனிக்கவில்லை.  மூன்று தளங்கள், படிகளில் தாவி இறங்கி, முதல் தளத்தில் இருக்கும் வார்டன் கதவை  தட்டி தகவல் சொல்லிவிட்டு, கீழே ஓடிவந்தால்... ஒரு பையன் மட்டும் ரத்தம் வெளியேற அசைவற்று கிடந்தான். பிணம்தான். இன்னொரு உடல் அல்லது ஆளைக் காணோம். அந்தரத்தில் நிமிர்ந்து பார்த்தேன் வழியில் எங்கும் தொங்குகிறானா என்று. ம்ஹூம், இல்லை. குழப்பமாக இருந்தது. ரெண்டு பேர் குதித்தார்களே! சொன்னால் யாரும் நம்பவில்லை. பிறகு மொட்டைமாடிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். ஐந்து மாதம் கழிந்திருக்கும், பக்கத்து ரூம் தினேஷ் நள்ளிரவில் எழுப்பினான். "டேய் குதிச்சிட்டானுங்க" அடுத்த தற்கொலை. இந்த முறை இரண்டு பிணங்கள் கிடந்தன. ஆனால், தினேஷ் என்னை தனியாக அழைத்து, மொத்தம் மூணுபேர் குதிச்சாங்கடா.... இப்போ ரெண்டு பேர்தான் கிடக்காங்க என்றான். எனக்கும்,

பேய்கதை

பூமிகா வாசலில் அமர்ந்து மகளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். பௌர்ணமி நிலா குட்டிப் பெண்ணுக்கு ஞாபகப் படுத்தியிருக்க வேண்டும். "அம்மா அம்மா, பேய் கதை ஒண்ணு சொல்லுமா"  உடனே, மரகிளைகள் குரங்குகள் நடப்பதைப் போல சலசலத்தது. அம்மா நிமிர்ந்து பார்த்தாள். கிளைகள் மட்டும் குலுங்கின. யாரும் இல்லை. "இப்போ வேணாண்டி. இரவில் நீ பயந்துக்குவே, சாமி கதை சொல்றேன்" என்றாள் டல்லடித்த பேச்சிலர் இளைஞர்களைப் போல சப்தமின்றி கிளைகள் அமைதியாகிவிட்டன.