Skip to main content

பேய் கதை - மூஞ்சுறு

சாந்தி படிக்கும் அதே வகுப்பில்தான் பூந்தியும் படிக்கிறான். அவர்கள் பள்ளிக்கூடம் ஊருக்கு வெளியில் களத்துமேடுப் போகும் வழியில் இருக்கிறது. பஞ்சாயத்துக் கட்டிகொடுத்த பாடாவதிக் கட்டிடம். 

வகுப்பில் பையன்கள் ஒன்பது பேர்தான். பெண்கள் பதினைந்துப் பேர் என்பதால் பூந்திக்குப் பயம். பயம் போவதற்காகச் சாந்தி அந்தப் பயல்களை ஆளுக்கொரு மூஞ்சுறு வளர்க்க யோசனைச் சொன்னாள். அன்றிலிருந்து பயல்கள் ஆளுக்கொரு மூஞ்சுறு வளர்த்தார்கள்.

சாந்தியின் தோழி நாமும் வளர்க்கலாமா என்று கேட்டதற்கு, அவனுங்க வளர்க்கிறது போதும் என்று நக்கலாகச் சொல்லிவிட்டாள். தோழி வற்புறுத்தியபோது “உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன் கேள். நான் இந்திரலோகத்து அப்சரஸ். இந்திரனுக்கு பிரியமான நர்த்தகி. என்னைச் சுவர்க்கம் செல்லும் பாதையில், நீச்சல் குளத்துடன் கூடிய மாளிகையில் தங்கவைதிருந்தான். ஒருநாள் நான் நீச்சல் உடையில் நின்றபடி சுவர்க்கம் செல்லும் ஆண்களைக் கிண்டல் செய்துகொண்டிருந்தேன். அப்போது அந்தவழியாக வந்த முனிவர் அதைப் பார்த்துவிட்டார். என்னைப் பூலோகத்தில் பிறந்து ‘ஈவ் டீசிங்’ கொடுமையை அனுபவி என்று சபித்து இங்கே அனுப்பிவிட்டார். எனக்கு இந்திரன் தவிர ஒன்பது காதலர்கள் இருந்தார்கள். அவர்களை மூஞ்சூருகளாக மாற்றி இந்தப் பயல்களைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டேன். எப்படி?” என்றாள்.

“அப்படியானால் நாங்கள் எல்லாம் யார்?” கேட்டாள் தோழி.

“நாமெல்லாம் ஒன்றே. என் தேவஅழகை ஒரே பூலோக பெண் சுமக்க முடியாது என்பதால், என் பல பாகங்களின் ஒரு பங்குதான் நீ, வகுப்பில் இருக்கும் மற்ற பெண்கள் என் மிச்ச பாகங்கள்” என்றாள்

“இந்த ஒன்பது லூசு பசங்க யார்?”

“அதான் தெரியலை. இந்திரனின் கைக்கூலிகளாக இருக்கும். எப்படியோ, மேலோகத்தில் இருக்கும் முனிவரை ஏமாற்றி நாம ஜாலியா இருந்தால் சரி” என்றாள் சாந்தி.

பூந்திக்கு மூஞ்சுறு வளர்க்கத் தொடங்கியதும் கொஞ்சம் தைரியம் வந்தது. அவன் தன் தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொண்டு ஊருக்குள் இருக்கும் இன்டர்நெட் சென்டருக்குச் சென்றான். “அன்புள்ள முனிவரே, நான் இங்கேயே பாதுகாப்பாக இருப்பேன் என்று இப்போது நம்புகிறேன். நீங்கள் குறிப்பிட்ட அந்த ராட்சசியை உளவு பார்த்து உங்களுக்கு அவ்வப்போது தகவல் சொல்கிறேன். என் பயம் நீங்கிவிட்டது.” என்று டைப் செய்து, araathu@yahoo.com என்ற மெயில் ஐடிக்கு அனுப்பினான்

Comments

Popular posts from this blog

பிறழ்வு - கதை 3

கட்டிடம் நான்காவது மாடியாக வளர்ந்து கொண்டிருந்தது. எலும்புக் கூடு நிற்பதைப் போல மொத்தமாக சிமென்ட் தூண்களும் தளங்களும் மட்டும் முடிந்திருந்தன. அடிப்படை கட்டுமான வேலைகளை முடித்துவிட்டுதான் சுவர் கட்டத்தொடங்குவது என்பது முடிவு. செங்கற்கள் கிடைப்பதும் சிரமமாக இருந்தது. மொத்தப் பணத்தையும் கட்டிவிட்டு காத்திருந்த காலங்கள் உண்டு. அந்தளவு இல்லாவிட்டலும், அடுத்த மாதங்களில் இன்னும் விலையும் தட்டுப்பாடும் குறையலாம் என்பதால் இன்னும் சுவர்வேலைகளை தொடங்கவில்லை தண்ணீர்விட்டுத் தேக்கியிருந்த தளத்தில் நிற்பது நன்றாக இருந்தது. அந்தி சூரியன் நகரின் பின்புலத்தில் தன் வர்ணஜாலங்களை தொடங்கியிருந்தான். மனப்பாடமாக இருந்த ஆதித்யஹிருதய பாடல்களை, ஒன்றிரண்டுதான் தெரியும். சொல்லத் தொடங்கினேன். எதிரிகளை சமாளிக்க இந்த ஸ்லோகங்கள் உதவும் என்று மோகன் கேட்டுக் கொண்டே இருப்பான். கட்டிட பொருட்கள் வாங்க சீனா போயிருக்கிறான். எனக்கு எதிரிகள் யாரும் இல்லை, ஆனாலும் ஸ்லோகத்தில் இருந்த வசீகரத்திற்காக சொல்வேன். வேலையாட்கள் தரைதளத்தில் மோட்டாரை இயக்கிவிட்டு உடல் கழுவிக் கொண்டிருந்தார்கள். சூர்யதாசுக்கு நாளைய வேலைகளை ஒப்படைக...

மூன்று வடையும் ஒரு சமாதானமும்

அவருக்கு டீக்கடை மசால்வடை என்றால் இஷ்டம். டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொல்லியும் அவ்வப்போது ஒன்றிரண்டு வடைகளை தெரிந்தவர்களுக்குத் தெரியாமல் சாப்பிட்டுவிடுவார். அன்றும் ஒரு கையில் வடையும், மறுகையில் டீயும் வைத்து, மாற்றி மாற்றி சுவைத்துக் கொண்டிருந்தார். வடை தீர்ந்தது. இன்னொன்று சாப்பிடலாமா என்று ஆசை. ஆனால், டாக்டர் சொன்னது யோசனைக்கு வந்தது.  அப்போது இவரைவிட பெரிய உடம்புடன் ஒருத்த ர் கண்ணாடிக் கூண்டிலிருந்து வடை எடுப்பதைப் பார்த்தார்.  தன்னைவிட கொழுத்த ஒருவர் கொழுப்பைப்பற்றிக் கவலைபடாதபோது தனக்கு என்னக் கேடு என்று சமாதானம் சொன்னபடி இன்னொன்றும் எடுத்துக் கொண்டார். அதுவும் தீரும் சமயத்தில் அந்த 'இவரைவிட' குண்டான நபர், இன்னொரு வடை எடுப்பதைக் கண்டார். அதனால் உந்தப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாவது வடையையும் காலி செய்தார். வயிறு நிரம்பிவிட்டது. அப்போது போட்டிக் குண்டர் அடுத்த வடையும் எடுக்கையில் நம்ம ஆள் கடுப்பாகிவிட்டார். என்னதான் ருசிக்கு அடிமை என்றாலும், இப்படியா தின்பது என்று இவருக்கே கோபம். அந்த ஆளை சரியாக பார்க்கும் ஆசையில் கடை உள்ளே நுழைந்தார்.  இவரை...

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்