Skip to main content

தீண்டல்

மதுப்பற்றி நன்கு தெரியும்
அருகிலிருக்கும் ஆபத்து
மதிமயக்கும் மாயா
பணம் உறிஞ்சும் அட்டை 
குணம் மாற்றும் நெருப்பு
குடிதாக்கும் இடி தீண்டல்
அழிந்த அறிந்த மனிதர்கள் அநேகம்
அவள் அரவணைப்பில்
மீளாச் சிலரும் என் சிநேகம்
பேய்வீட்டில் வாழநேர்ந்த
மருமகள்போல
தமிழ்த்திருநாட்டில்
குடிக்காதவர்கள்
ஒவ்வொருநாளும்
அவளைக் கண்டும் காணாத
ரிஷிபோலக் கடக்கையில்
தெய்வப் பிரசாதம் என
தருகிறார்கள்
ஒருமடக்குச் சாராயம்
வா விஸ்வாமித்ரா என உள்ளும்
புறமும் கிளர்ந்து எழுகிறாள் மேனகை
எனக்குள்.

Comments

Popular posts from this blog

நினைவுப்பாதை, நகுலன்

நாம் முக்கியம் என்று நினைப்பதெல்லாம் அப்படி முக்கியமில்லை என்று நினைக்கக் கற்றுக் கொள்கிறோமோ அன்று நமது பிரச்சனைகளெல்லாம் பைசலாகிவிடும். ஆனால் இப்படியெல்லாம் சொல்வதெளிது. செய்வதரிது. அவர் அடிக்கடி ஒரு உதாரணம் சொல்வார். உனக்கு வேண்டிய ஆனால் அவசியமில்லாத ஒன்று கைமறதியாக வைத்துவிட்டதால் கிடைக்கவில்லை. அது அப்படியே தொலைந்துப் போனாலும் பெரிய நஷ்டமுமில்லை. விவேகப் பூர்வமாக இனிமேல் சற்று ஒழுங்காக இருக்க வேண்டுமென்பதும், இந்த விஷயத்தை மறந்துவிடவேண்டும் என்பதும்தான் ஞானம். ஆனால் முக்கால்வாசிப் பேர்களும் இப்படியெல்லாம் மனம் உழல்வதால் தாங்களும் உழல்வார்கள். மனோதத்துவம் படித்துபடித்து நமக்குப் பிரச்சனைகள்தான் பிரச்சனைகளின் பரிகாரத்தைவிட முக்கியமாகப்படுகிறது என்பார். ~ நினைவுப்பாதை, நகுலன்

காமம்

இறுகத் தாழிடப்பட்ட அறையினுள் விடுதலை செய்கிறோம் நம் மிருகங்களை முகர்ந்து ஊளையிட்டு குதறி புணர்ந்து களைத்து ஓய்ந்த சிறு அவகாசத்தில் அகக் கூண்டில் பூட்டிவிட்டு அறைகதவு திறக்கிறோம் பதுங்கிய மிருங்கங்கள் நமது கண்கள் வழியே நமக்குள் தேடுகின்றன அவற்றின் பிம்பங்களை ஒப்பனை மிகுந்த மனதின் அடியாழ இருளில் அமிழ்த்தி  வைக்கிறோம் அவற்றை பத்திரமான கூண்டுகளுடன்

வயலும் வாழ்வும்

துகிலில்லாத் தேகத்தை ஈர வயல்வெளியாய் கிடத்தியிருக்கிறாய் மென் ரோமங்களும், வியர்வையின் மினுமினுப்பும் தோலின் நுண்ணிய வரிகளும் சிலிர்த்தும் கிளர்ந்தும் கசிந்தும் விம்மியும் கிடக்கிறது பூவுலகின் சிற்றுரு (Miniature) காளையும் ஏரும் கலப்பையும் உழவனும் கடவுளும் நானே என்று கவிகிறேன் உன் தேகம் மீது அவதாரமாய்