Skip to main content

பிறழ்வு - கதை 1

மென்மையான குரலில் "நீங்கள் ஏன் இறந்து போய்விட கூடாது" என்று கேட்டேன். அதன் அர்த்தம் அவருக்கு உடனே புரிந்தாலும் சற்று தாமதமாக பதில் சொன்னார்.

"என்ன பிரச்சனை வந்தாலும் ஒருவன் இறந்துவிட வேண்டியதில்லை என்பதுதானே நீ எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் செய்தி. ஏன் என்னிடம் மட்டும் இப்படி கேட்கிறாய்" என்றார்.

"பிறர் வேறு. அவர்களை நான் நல்வழிப்படுத்த வேண்டியுள்ளது. அவர்கள் கொஞ்சம் பிரயோசனமான வாழ்கையை வாழ்கிறார்கள். உங்களைப் போல அல்ல. நீங்கள் மிகவும் பழைய மனிதர். நீங்கள் செய்வது எதுவும் சரியாக செல்லவில்லை. இத்தனை தோல்வியுடன் நீங்கள் வாழ்வது சரியல்ல."

கண்ணாடியில் பிரதிபலித்த கண்களின் ஈரம் கண்ணீராகவும் இருக்கலாம். நான் சொல்ல வேண்டியதின் மிக முக்கியமான செய்தியை சொன்னேன்.

"மேலும், உங்களை சகித்துக் கொள்வது எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது. உங்களால் நான் அடையும் மன உளைச்சல் மிக அதிகம். உங்கள் மூலம் நரகம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அறைக்கு வந்து சேருகிறது."

அவரிடம் நான் சில சிறு விஷகுப்பிகள், வசீகரமான கண்ணாடியில் பிரதிபலிப்பு உள்ள திரவமுடையவை, அந்த அறையில் இருப்பதை சொன்னேன். பிறகு அவர் இறப்பது எனக்கு மகிழ்ச்சி தரப் போவது இல்லை என்று சொன்னேன். நான் விடுதலையை கோரி்தான் அவருக்கு இந்த சந்தர்பத்தை ஏற்படுத்தியதை மன்னிப்பு கேட்கும் விதத்தில் விளக்கினேன். அவருக்கு அனைத்தும் புரிந்தது. அமைதியாக என் படுக்கைக்கு திரும்பினேன். அவர் என்ன செய்கிறார் என்பதை மறந்து நான் தூங்கினேன்.

அந்த அறையில் பிணம் நாறுவதை உணர்ந்து என் அண்டை வீட்டுக்கார்கள் எவரேனும் தகவல் சொல்லி என்னை வந்து சுத்தம் செய்துவிட்டு போகலாம். கடைசியாக ஒரு முறை அவர்களுக்கு அந்த துன்பத்தை தருவதை கடவுள் மன்னிக்கட்டும். இறக்கப் போவது அவரோ நானோ, ஆனால் பிறகு நாங்கள் இருவரும் இந்த பூமியில் இருக்கமாட்டோம்

Comments

Popular posts from this blog

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்
ஒருத்தியை எல்லை கடந்து நெருங்கிவிடும் தருணத்தில் அவள் வசிகரம் அளவு கடந்து ஈர்க்கிறது - அவள் பேரழகியாகி விடுகிறாள் புதை மணலுக்குள் சிக்கி மூர்ச்சையானவனைப் போல உயிரும் மனமும் ஸ்பரிசத்துடன் ஒன்றி புற உலகை துண்டித்துக் கொள்கிறது உயிர் பிழைத்தலின் இச்சைக்கு நிகரான வெறியூறுகிறது வேஷங்கள் நீர்த்து நிர்வாணம் விரிந்து நதியாகி அவர்களைப் பரிசுத்தமாக்கும் போது கொலைப் பட்டினிகாரர்கள் உணவை புசிப்பது போல நகரீகத்தை மறந்துவிடுகிறார்கள் தம்மை சொர்க்கதிலிருந்து விடுவித்துக் கொள்ளும் போது மீண்டும் விதைக்கப்படுகிறது மற்றொரு ஆசை விருட்ச்சத்தின் விதை

பிறழ்வு - கதை 2

ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம், நானும் அவனும், அவன் என் சித்தப்பா, வைப்பூர் ரயில் கிராசிங் தாண்டும் போது எங்கள் பாதையில் ஒரு பிண ஊர்வலம் சென்று கொண்டிருப்பதை பார்த்தோம். பிண ஊர்வலத்தை தாண்டி எப்போது பள்ளிக்கூடம் செல்வது என்று கேட்டான். நான் என்ன செய்வது என்று கேட்டேன். வா இந்த ரயில் தண்டவாளம் ஒட்டியபடி நடந்து போகலாம் என்றான். எங்கள் சைக்கிளை ஒரு புதர் மறைவில் ஒளித்து வைத்துவிட்டு தண்டவாளம் ஒட்டி நடக்கத் தொடங்கினோம். சித்தப்பா என் வயதுக்கு இணையாக இறங்கிவந்து பேசுவான். அதனால் நேர் பேச்சில் அவர் இவர் பயன்படுத்தினாலும் மானசீகமாக அவன் என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது. ஆனால், சேர்வராயன் ஆறு குறுக்கே இருந்த ரயில்வே பாலம் பயமுறுத்தியது. அது துருபிடித்த இரும்பு பாலம். ஒரு வேளை எந்த திசையில் இருந்தாவது ரயில் வந்தால் பாதையை ஒட்டி அமர்ந்து கொண்டால் போதும் ஆபத்து இல்லை என்றான். கம்பிகளின் உடே இருந்த இடைவெளியில், மிக கீழே, ஆறு சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் பாலத்தை கடந்து செல்கையில் ரயில்வே கேட் மூடப்படுவதை பார்த்தோம். அவன் என்னிடம் "இரு இப்படி ஓரமா நின்னு ரயில் இந்த ப...