Skip to main content
ஒருத்தியை எல்லை கடந்து
நெருங்கிவிடும் தருணத்தில்
அவள் வசிகரம்
அளவு கடந்து ஈர்க்கிறது - அவள்
பேரழகியாகி விடுகிறாள்
புதை மணலுக்குள் சிக்கி
மூர்ச்சையானவனைப் போல
உயிரும் மனமும்
ஸ்பரிசத்துடன் ஒன்றி
புற உலகை
துண்டித்துக் கொள்கிறது
உயிர் பிழைத்தலின் இச்சைக்கு நிகரான
வெறியூறுகிறது
வேஷங்கள் நீர்த்து
நிர்வாணம் விரிந்து நதியாகி
அவர்களைப் பரிசுத்தமாக்கும் போது
கொலைப் பட்டினிகாரர்கள்
உணவை புசிப்பது போல
நகரீகத்தை மறந்துவிடுகிறார்கள்
தம்மை சொர்க்கதிலிருந்து
விடுவித்துக் கொள்ளும் போது
மீண்டும் விதைக்கப்படுகிறது
மற்றொரு ஆசை விருட்ச்சத்தின் விதை

Comments

Popular posts from this blog

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்

பிறழ்வு - கதை 2

ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம், நானும் அவனும், அவன் என் சித்தப்பா, வைப்பூர் ரயில் கிராசிங் தாண்டும் போது எங்கள் பாதையில் ஒரு பிண ஊர்வலம் சென்று கொண்டிருப்பதை பார்த்தோம். பிண ஊர்வலத்தை தாண்டி எப்போது பள்ளிக்கூடம் செல்வது என்று கேட்டான். நான் என்ன செய்வது என்று கேட்டேன். வா இந்த ரயில் தண்டவாளம் ஒட்டியபடி நடந்து போகலாம் என்றான். எங்கள் சைக்கிளை ஒரு புதர் மறைவில் ஒளித்து வைத்துவிட்டு தண்டவாளம் ஒட்டி நடக்கத் தொடங்கினோம். சித்தப்பா என் வயதுக்கு இணையாக இறங்கிவந்து பேசுவான். அதனால் நேர் பேச்சில் அவர் இவர் பயன்படுத்தினாலும் மானசீகமாக அவன் என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது. ஆனால், சேர்வராயன் ஆறு குறுக்கே இருந்த ரயில்வே பாலம் பயமுறுத்தியது. அது துருபிடித்த இரும்பு பாலம். ஒரு வேளை எந்த திசையில் இருந்தாவது ரயில் வந்தால் பாதையை ஒட்டி அமர்ந்து கொண்டால் போதும் ஆபத்து இல்லை என்றான். கம்பிகளின் உடே இருந்த இடைவெளியில், மிக கீழே, ஆறு சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் பாலத்தை கடந்து செல்கையில் ரயில்வே கேட் மூடப்படுவதை பார்த்தோம். அவன் என்னிடம் "இரு இப்படி ஓரமா நின்னு ரயில் இந்த ப...