Skip to main content

பேய் கதை - மூஞ்சுறு

சாந்தி படிக்கும் அதே வகுப்பில்தான் பூந்தியும் படிக்கிறான். அவர்கள் பள்ளிக்கூடம் ஊருக்கு வெளியில் களத்துமேடுப் போகும் வழியில் இருக்கிறது. பஞ்சாயத்துக் கட்டிகொடுத்த பாடாவதிக் கட்டிடம். 

வகுப்பில் பையன்கள் ஒன்பது பேர்தான். பெண்கள் பதினைந்துப் பேர் என்பதால் பூந்திக்குப் பயம். பயம் போவதற்காகச் சாந்தி அந்தப் பயல்களை ஆளுக்கொரு மூஞ்சுறு வளர்க்க யோசனைச் சொன்னாள். அன்றிலிருந்து பயல்கள் ஆளுக்கொரு மூஞ்சுறு வளர்த்தார்கள்.

சாந்தியின் தோழி நாமும் வளர்க்கலாமா என்று கேட்டதற்கு, அவனுங்க வளர்க்கிறது போதும் என்று நக்கலாகச் சொல்லிவிட்டாள். தோழி வற்புறுத்தியபோது “உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன் கேள். நான் இந்திரலோகத்து அப்சரஸ். இந்திரனுக்கு பிரியமான நர்த்தகி. என்னைச் சுவர்க்கம் செல்லும் பாதையில், நீச்சல் குளத்துடன் கூடிய மாளிகையில் தங்கவைதிருந்தான். ஒருநாள் நான் நீச்சல் உடையில் நின்றபடி சுவர்க்கம் செல்லும் ஆண்களைக் கிண்டல் செய்துகொண்டிருந்தேன். அப்போது அந்தவழியாக வந்த முனிவர் அதைப் பார்த்துவிட்டார். என்னைப் பூலோகத்தில் பிறந்து ‘ஈவ் டீசிங்’ கொடுமையை அனுபவி என்று சபித்து இங்கே அனுப்பிவிட்டார். எனக்கு இந்திரன் தவிர ஒன்பது காதலர்கள் இருந்தார்கள். அவர்களை மூஞ்சூருகளாக மாற்றி இந்தப் பயல்களைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டேன். எப்படி?” என்றாள்.

“அப்படியானால் நாங்கள் எல்லாம் யார்?” கேட்டாள் தோழி.

“நாமெல்லாம் ஒன்றே. என் தேவஅழகை ஒரே பூலோக பெண் சுமக்க முடியாது என்பதால், என் பல பாகங்களின் ஒரு பங்குதான் நீ, வகுப்பில் இருக்கும் மற்ற பெண்கள் என் மிச்ச பாகங்கள்” என்றாள்

“இந்த ஒன்பது லூசு பசங்க யார்?”

“அதான் தெரியலை. இந்திரனின் கைக்கூலிகளாக இருக்கும். எப்படியோ, மேலோகத்தில் இருக்கும் முனிவரை ஏமாற்றி நாம ஜாலியா இருந்தால் சரி” என்றாள் சாந்தி.

பூந்திக்கு மூஞ்சுறு வளர்க்கத் தொடங்கியதும் கொஞ்சம் தைரியம் வந்தது. அவன் தன் தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொண்டு ஊருக்குள் இருக்கும் இன்டர்நெட் சென்டருக்குச் சென்றான். “அன்புள்ள முனிவரே, நான் இங்கேயே பாதுகாப்பாக இருப்பேன் என்று இப்போது நம்புகிறேன். நீங்கள் குறிப்பிட்ட அந்த ராட்சசியை உளவு பார்த்து உங்களுக்கு அவ்வப்போது தகவல் சொல்கிறேன். என் பயம் நீங்கிவிட்டது.” என்று டைப் செய்து, araathu@yahoo.com என்ற மெயில் ஐடிக்கு அனுப்பினான்

Comments

Popular posts from this blog

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்
ஒருத்தியை எல்லை கடந்து நெருங்கிவிடும் தருணத்தில் அவள் வசிகரம் அளவு கடந்து ஈர்க்கிறது - அவள் பேரழகியாகி விடுகிறாள் புதை மணலுக்குள் சிக்கி மூர்ச்சையானவனைப் போல உயிரும் மனமும் ஸ்பரிசத்துடன் ஒன்றி புற உலகை துண்டித்துக் கொள்கிறது உயிர் பிழைத்தலின் இச்சைக்கு நிகரான வெறியூறுகிறது வேஷங்கள் நீர்த்து நிர்வாணம் விரிந்து நதியாகி அவர்களைப் பரிசுத்தமாக்கும் போது கொலைப் பட்டினிகாரர்கள் உணவை புசிப்பது போல நகரீகத்தை மறந்துவிடுகிறார்கள் தம்மை சொர்க்கதிலிருந்து விடுவித்துக் கொள்ளும் போது மீண்டும் விதைக்கப்படுகிறது மற்றொரு ஆசை விருட்ச்சத்தின் விதை

பிறழ்வு - கதை 2

ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம், நானும் அவனும், அவன் என் சித்தப்பா, வைப்பூர் ரயில் கிராசிங் தாண்டும் போது எங்கள் பாதையில் ஒரு பிண ஊர்வலம் சென்று கொண்டிருப்பதை பார்த்தோம். பிண ஊர்வலத்தை தாண்டி எப்போது பள்ளிக்கூடம் செல்வது என்று கேட்டான். நான் என்ன செய்வது என்று கேட்டேன். வா இந்த ரயில் தண்டவாளம் ஒட்டியபடி நடந்து போகலாம் என்றான். எங்கள் சைக்கிளை ஒரு புதர் மறைவில் ஒளித்து வைத்துவிட்டு தண்டவாளம் ஒட்டி நடக்கத் தொடங்கினோம். சித்தப்பா என் வயதுக்கு இணையாக இறங்கிவந்து பேசுவான். அதனால் நேர் பேச்சில் அவர் இவர் பயன்படுத்தினாலும் மானசீகமாக அவன் என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது. ஆனால், சேர்வராயன் ஆறு குறுக்கே இருந்த ரயில்வே பாலம் பயமுறுத்தியது. அது துருபிடித்த இரும்பு பாலம். ஒரு வேளை எந்த திசையில் இருந்தாவது ரயில் வந்தால் பாதையை ஒட்டி அமர்ந்து கொண்டால் போதும் ஆபத்து இல்லை என்றான். கம்பிகளின் உடே இருந்த இடைவெளியில், மிக கீழே, ஆறு சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் பாலத்தை கடந்து செல்கையில் ரயில்வே கேட் மூடப்படுவதை பார்த்தோம். அவன் என்னிடம் "இரு இப்படி ஓரமா நின்னு ரயில் இந்த ப...